districts

img

அறந்தை பிரண்ட்ஸ் ரோட்டரி சங்கம் பதவி ஏற்பு விழா

அறந்தாங்கி, ஜூன் 16- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தை ஃப்ரண்ட்ஸ் ரோட்டரி சங்க புதிய நிர்வாகி கள் ஆட்சி மன்ற குழுவினர் பதவி ஏற்பு விழா  அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் நடைபெற்றது.

ரோட்டரி அறம் ஆண்டின் தலைவர் முருகேசன் வரவேற்றார். அறம் ஆண்டின் செயலாளர் சுப்பு ஆண்டறிக்கை வைத்தார்.  2024-2025 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகளாக எஸ்.வெங்கட் குமார் தலைவராகவும், கே. சாத்தையா செயலாளராகவும், சி.செல்வம் பொருளாளராகவும் பதவியேற்றனர்.

முதன்மை விருந்தினர் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜா கோவிந்தசாமி, கொடுமுடி பட்டிமன்ற நடுவர் பாரீஸ்ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். ரோ ட் டரி மாவட்ட இணைச் செய லாளர் பீர் சேக், மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார், பட்டயத்  தலைவர் ரெ.தங்கதுரை, துணை ஆளுநர் கணேஷ் குமார், பேராவூரணி கைபா  அமைப்பு தலைவர்  கார்த்திகேயன் வேலுச்சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 

தொடர்ந்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு ஆர்.ஓ.வாட்டர் அமைப்பதற் கான வாட்டர் பில்டர் வழங்கப்பட்டது, அறந் தாங்கி அரசு மருத்துவமனைக்கு ஐந்து மின்  விசிறிகள் வழங்கப்பட்டன. அறந்தாங்கி அரசு  நூலகத்தில், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு தேவை யான, டாக்டர் அகர்வால் எழுதிய தமிழ் பதிப்பகம் வழங்கப்பட்டது. நீட் தேர்வுக்கு படிக்கும் மாணவி ஒருவருக்கு பட்டயத் தலைவர் தங்கதுரை நிதி வழங்கினார். பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.