புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட தாந்தானி ஊராட்சி சிதம்பர விடுதியில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம், சலவை தொழிலாளிகளுக்கு இஸ்திரி பெட்டி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, இறப்பு உதவித்தொகை போன்றவற்றை சுற்றுச்சூழல் இளைஞர் நலன் காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டுத்துறை அமைமச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் அறந்தாங்கி எம்.எல்.ஏ. எஸ்.டி.ராமச்சந்திரன், ஆர்.டி.ஓ சொர்ணராஜ் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் 331 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது.