புதுக்கோட்டை, டிச.1- தனியார் கொள்ளை லாபம் ஈட்டும் வகையில் அரசே தரமற்ற விதைக்கடலையை விற்பனை செய்யலாமா என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். பொன்னுச்சாமி, செயலாளர் ஏ. ராமையன் ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு இடங்க ளில் அளவுக்கு அதிக அளவில் பருவமழை பெய்துள்ளது. மயி லாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்க ளில் மழையின் தாக்கத்தால் விவ சாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்ற போதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் போதுமான அளவுக்கு மழை அளவு பதிவாகவில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஓரளவிற்கு பருவ மழை பெய்து வருவதால் விவ சாயிகள் மகிழ்சி அடைந்துள்ளனர். இந்த மழையை நம்பி விவசாயி கள் சாகுபடிக்கு தயாராகி வரு கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல், வாழை மற்றும் கடலை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகை கள் பெருமளவில் சாகுபடி செய் யப்படுகின்றன. ஆலங்குடி, கறம் பக்குடி, அறந்தாங்கி, புதுக் கோட்டை, கந்தர்வகோட்டை உள் ளிட்ட வட்டாரங்களில் அதிக அளவு நிலக்கடலை சாகுபடி செய்யப்படு கிறது. தமிழகத்திலேயே அதிக அளவில் கடலை அறவை மில் களும், அதனையொட்டி ஆயில் மில்களும் ஆலங்குடியில்தான் உள்ளன. நவம்பர், டிசம்பர் மாதங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்ற காலம். இந்த மாதங்களில் சாகு படி செய்யப்படும் கடலை அதிக மகசூல் தருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், விவ சாயிகள் தங்களது நிலங்களில் இந்த மாதங்களில் மற்ற சாகுபடி களைத் தவிர்த்து நிலக்கடலை பயி ரிட விரும்புகின்றனர். ஆனால், அவர்களுக்கு விதைக்கடலை கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. கடந்த மாதங்களில் ஒட்டுடன் கூடிய விதைக்கடலை கிலோ ஒன்றுக்கு 80 முதல் 100 ரூபாய் வரை வெளி மார்க்கெட்டில் விற் கப்பட்ட நிலையில், தற்பொழுது 120 முதல் 150 ரூபாய் வரை விற் கப்படுகிறது. இதனால் ஒரு ஏக்க ருக்கு நிலக்கடலை சாகுபடி செய்ய விதைக்கடலைக்கு மட்டுமே ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய கட்டா யத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட் டுள்ளனர். இது விவசாயிகளுக்கு எந்த வகையிலும் கட்டுபடியானது இல்லை. பொதுவாக, வேளாண் விரி வாக்க மையங்களில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறு வகைகள் வெளி மார்க்கெட்டைவிட தரமாகவும் விலை விலையில் மலிவாக கிடைக்கும். ஆனால் நிலக்கடலை அவ்வளவு தரமானதாக இருப்ப தில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதேநேரத்தில் ஒட்டுடன் கூடிய விதைக்கடலை கிலோ ஒன்றுக்கு ரூ.60-க்கு வேளாண் விற்பனை மையங்ளில் விற்கப்படு கிறது. வெளிமார்க்கெட்டில் ரூ. 150 கொடுத்து வாங்குவதற்கு வழி யில்லாமல் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மையங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். ஆனால், அங்குள்ள விதைக் கடலை கடந்த காலங்களைவிட மிக மிக மோசமா தரமற்ற நிலை யில் உள்ளதாக விவசாயிகள் தெரி விக்கின்றானர். 10 கடலை விதை இருந்தால் அதில் 3 விதைகூட முளைப்புத் திறன் உள்ளதாக இருப்பதில்லை என வேதனை தெரி விக்கின்றனர்.
அதையும் வேறு வழியோ இல்லாமல் விரிவாக்க மையங்களில் வாங்க வருபவர்களி டம் இருப்பு இல்லை என அலு வலர்கள் பெரும்பாலான நேரங் களில் கையை விற்கின்றனர். உளுந்து, துவரை உள்ளிட்ட பருப்பு வகைகளை மிகத்துள்ளிய மான தரத்துடன் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வேளாண் மைத்துறை விதைக்கடலைக்கு மட்டும் ஏன் அக்கறை செலுத்துவ தில்லை? ஏன் வெளிமார்க்கெட்டில் கொள்முதல் செய்து விவசாயி களுக்குத்தர வேண்டும்? வேளாண் மைத்துறையே விதைக்கடலை யை உற்பத்தி செய்யக்கூடாதா? அல்லது குறிப்பிட்ட விவசாயி களுக்குப் பயிற்சி அளித்து தரமான விதைக்கடலையை உற்பத்தி செய்து அதை கொள்முதல் செய்து விவசாயிகளுக்குக் தரக்கூடாதா? இதில் உள்ள உள்நோக்கம் என்ன? தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க அரசே வலிவகுத் துக்கொடுக்கிறதா என்கிற கேள்வி எழுவது நியாம்தானே! தமிழக அரசும் வேளாண்மைத் துறையும் இதுகுறித்து தீவிர அக் கறை செலுத்த வேண்டும். போது மான விதைகளை வேளாண்மைத் துறையே உற்பத்தி செய்து விவ சாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் கடலைக்கு கட் டுப்படியான விலைகிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இருப்பு வைத்து விற்பனை செய்வ தற்கு வசதியாக போதுமான சேமிப்புக் கிடங்குகளை அமைத் துத்தர வேண்டும். இதுகுறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைத் திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நடத்தும். இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.