அறந்தாங்கி, ஜூன் 6- புதுக்கோட்டை மாவட் டம் மணமேல்குடி அருகே வெள்ளூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோ வில் வைகாசி பெருந்திரு விழாவை முன்னிட்டு மாபெ ரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது ,
இந்த போட்டியில் மதுரை, திருச்சி,தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநா தபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன, இதில் பெரிய மாடு, நடு மாடு, கரிச்சான் மாடு என மூன்று பிரிவுகளாக இந்த போட்டியானது நடை பெற்றது,
போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவுக ளிலும் முதல் மூன்று இடங்க ளை பிடித்த மாட்டின் உரிமை யாளர்களுக்கு ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கப்பரிசும் கோப்பைகளும் வழங்கப் பட்டன. பந்தய நிகழ்ச்சியை சாலையின் இரு புறமும் குவிந்திருந்த ஆயிரக்க ணக்கான மக்கள் கண்டு ரசித்தனர், மணமேல்குடி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.