இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்த தானக் கழக மாநில மாநாடு பிப்ரவரி 17-18 தேதிகளில் புதுக்கோட்டையில் நடைபெறுவதையொட்டி, சனிக்கிழமையன்று புதுக்கோட்டை திலகர் திடலில் இருந்து குருதிக் கொடையாளர்கள் பல்லாயிரம் பேர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. இதனை கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை கொடியசைத்து துவக்கிவைத்தார். வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மத்தியக் குழு உறுப்பினர் எம்.ஷாஜர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.