புதுக்கோட்டை, மார்ச் 27- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர கத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை யில் திங்கட்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக் கைகள் அடங்கிய 328 மனுக்களை பொது மக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளு மாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 8 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயி ரம் வீதம் ரூ.2 லட்சம் வங்கிக் கடன் அரசு மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப் படும் அரசு நலத்திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே 12 வட்டங்களிலும் விழிப்பு ணர்வு ஏற்பாடு செய்யப்பட்டு, கலை நிகழ்ச்சி வாகனத்தினை மாவட்ட ஆட்சி யர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலு வலர் மா.செல்வி, மாவட்ட வழங்கல் அலு வலர் ஆர்.கணேசன், மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.