districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஏப்.12- மாற்றுத்தி றனாளிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வலியு றுத்தி புதுக்கோட்டையை அடுத்த காவேரி  நகரில் மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அன்னவாசல் ஒன்றியம் காவேரி நகர் தபால்நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சண்முகம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி நிர்வாகி கள் திருநாவுக்கரசு, ராதிகா உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண் டர்களின் விலை உயர்வுகளை கட்டுப்படுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திற னாளிகளுக்கு அரசு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். பெட்ரோல் மற்றும் டீசலை மானிய விலை யில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

;