districts

img

செயலிழந்து கிடக்கும் அம்மா உணவக குடிநீர் இயந்திரம் வாலிபர் சங்கம் நூதனப் போராட்டம்

அறந்தாங்கி, நவ.22 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் அம்மா உணவகத்தில் ஏழை, எளியவர் கள் உணவருந்திவிட்டு பருகும் குடிநீர் இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது. இதனால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்படு கின்றனர். அம்மா உணவகத்தை சுற்றி நோய்த் தொற்று ஏற்படும் வகையில் சாக்கடை நீர் நிரம்பி இருப்பதை சரி செய்ய வேண்டும். அம்மா உணவகத்தில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களை சாக்கடை சுத்தம் செய்ய சொல்வ தை நிறுத்த வேண்டும். அவர்க ளை சமையல் வேலைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் அறந்தாங்கி  காந்தி பூங்கா சாலையில் இருந்து பேரணியாக வந்து, செயல்படாத அம்மா உணவக குடிநீ இயந்தி ரத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் எஸ்.கோபாலகிருஷ் ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மகாதீர், முன்னாள் மாவட்ட தலைவர் கர்ணா, ஒன்றிய செயலாளர் பாண்டிகௌதம், பொருளாளர் சங்கர், முன்னாள் ஒன்றியத் தலைவர் சசி உள்பட பலர் பங்கேற்றனர். சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கர்ணா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை செயலாளர் கவி பாலா, வாலிபர் சங்க மணமேல்குடி ஒன்றிய செயலாளர் காளிதாசன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் இந்துராணி, சிபிஎம் பிரேம்குமார் உள்ளிட்டோர் பேசினர். நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அலு வலர்கள் போராட்டம் நடத்திய வாலிபர் சங்கத்தினரிடம், ‘சாக்க டையை உடனே சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் இயந்திரத்தை சரிசெய்ய நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது’ என உறுதியளித்தனர்.