குடவாசல், ஜூன் 29 - திருவாரூர் மாவட்டம் அன்னியூரிலிருந்து பேரளம் வரை உடனடியாக புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். பல வருடமாக மிகவும் ஆபத்தான நிலையில் இடி யும் தருவாயில் உள்ள திருமீயச்சூர் அங்கன் வாடி மையத்தை இடித்துவிட்டு புதிய கட்டி டம் கட்டித் தர வேண்டும். திருமீயச்சூர் பகுதி முழுவதும் சீர்கெட்டுப் போன இணைப்பு சாலைகளை உடனடியாக அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் நன்னிலம் ஒன்றி யக் குழு சார்பாக நூதனப் போராட்டம் நடை பெற்றது. அன்னியூர் கிராமத்தில் இருந்து ஊர்வல மாக புறப்பட்டு பேரளம் கடைவீதியில் மாபெ ரும் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் கே.எம்.பாலா தலைமை வகித்தார். வாலிபர் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அன்னியூர் கிராம சாலையில் இருந்து சுமார் ஆறு கி.மீட்டர் தூரம் முழக்கமிட்டவாறு நடந்தே வந்து, பேரளம் கடைவீதியில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத் தின்போது பேரளம் காவல்துறைக்கும்-வாலிபர் சங்கத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பின்னர் சாலையில் பாடை கட்டி போராட்டம் நடைபெற்றது. சாலை மறியல் போராட்டத்தை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.பி.ஜோதிபாசு, மாவட்ட தலைவர் எஸ்.எம்.சலா வுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பாடைகட்டி நடந்த மறியல் போராட்டத்தில் வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள், அன்னி யூர் கிராமத்தை சார்ந்த 150 பெண்கள் கலந்து கொண்டனர்.