பொன்னமராவதி, ஏப்.6- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றி யத்தில் உள்ள அரசு மருத்து வமனைகள், ஆரம்ப சுகா தார நிலையங்களில் மாதர் சங்கத்தின் பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் மதி யரசி, மணிமேகலை, லதா, சுபா, ராஜாமணி,ராதா ஆகி யோர் கள ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய மதியரசி, “வளையபட்டி அரசு மருத்து வமனை முன்பாக அனைத் துப் பேருந்துகளும் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுத்து நோயாளி கள், மூத்த குடிமக்களின் சிர மங்களைப் போக்க வேண் டும். வளையபட்டி மருத்துவ மனையில் போதிய மருத்து வர்கள், பணியாளர்கள், பாது காவலர்கள் நியமிக்க வேண்டும். சிதிலமடைந் துள்ள பொன்னமராவதி அமரகண்டான் ஆரம்ப சுகா தார நிலையத்திற்கு புதிதாக கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும்” என்றார்.