பொன்னமராவதி, ஜூலை 6- பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் ஊராட்சியில் ஓஎச்டி ஆபரேட்டராக பணிபுரியும் 12 தொழிலாளர்களுக்கு கடந்த 40 மாதமாக சம்பளம் வழங்கப் படாத்தை கண்டித்தும், கடந்த மே மாதம் வட்டாட்சியர் முன்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் குறைந்தபட்சம் தொகுப்பூதியம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை மீறி கொடுக்க மறுத்து அடாவடியாக செயல்படும் ஆல வயல் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும்,சம்பளத்தை உடனடி யாக வழங்க மாவட்ட நிர்வாக மும், தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலி யுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 12 தொழிலா ளர்களின் குடும்பத்தினர் கஞ்சி காய்ச்சி உண்டு உறங்கி காத்தி ருக்கும் போராட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக நடைபெற் றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே.முகமது அலி ஜின்னா தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.சலோமி, கட்டுமானத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சி.அன்பு மண வாளன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் என். பக்ருதீன், மாதர் சங்க ஒன்றிய பொறுப்பாளர் ஆர்.மதியரசி, வாலி பர் சங்க ஒன்றிய பொறுப்பாளர் கே. குமார், சாலையோர வியாபாரி கள் சங்க செயலாளர் தீன், தலை வர் சாத்தையா, விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பி.ராம சாமி,ஓஎச்டி தொழிலாளர்கள் சங்கர், ராஜேந்திரன், தனலட்சுமி, பிடாரி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.