districts

மின்சார சட்டத் திருத்தம் 2021-ஐ கைவிட வேண்டும்: சிஐடியு கோரிக்கை

புதுக்கோட்டை, ஜூலை 10 - ஒன்றிய அரசு மின்சார சட்டத் திருத்தம் 2021-ஐ ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) புதுக்கோட்டை திட்ட 13 ஆவது மாநாடு  புதுக்கோட்டையில் நடைபெற்றது. திட்டத் தலைவர் எம்.கலியபெருமாள் தலைமை வகித்தார். ஓய்வு பெற்றோர் நல அமைப்புச் செயலாளர் பி.ஆவுடைமுத்து கொடியேற்றினார். மாநாட்டை தொடங்கி வைத்து மத்திய துணைத் தலைவர் எஸ்.ரெங்கராஜன் பேசினார். செயலாளர் கு.நடராஜன், பொருளாளர் ஆர்.ஆறுமுகம் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். மாநிலச் செயலாளர் எஸ்.அப்பாத்துரை நிறைவுரையாற்றினார். மாநாட்டில் தலைவராக எஸ்.சித்தையன், செயலாளராக கு.நடராஜன், பொருளாளராக ஆர்.ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், சங்கத்தின் திருச்சி மண்டல செயலாளர் எஸ்.அகஸ்டின், மாநில துணைத்தலைவர் எஸ்.ராஜாராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மின்சார சட்டத் திருத்தம் 2021 ஐ கைவிட வேண்டும். 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை விரைந்து நடத்த வேண்டும். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பகுதி நேர ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.