districts

8 ஆண்டுகளாக படுக்கையில் கிடக்கும் இளைஞர் காப்பகத்தில் சேர்க்க அரசுக்கு வேண்டுகோள்

பொன்னமராவதி, ஜன.1 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதி பாண்டி மான் கோவில் வீதியைச்  சேர்ந்தவர் வெங்கடேசன் (34). இவர் 8 வருடங் களுக்கு முன்பு சொந்தமாக மெக்கானிக் தொழில் நடத்தி வந்தார்.  இந்நிலையில் கடந்த எட்டு வருடத்திற்கு முன்பு  நிகழ்ந்த விபத்தில் காயம்  அடைந்து மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். நாள டைவில் அவரது ஒவ்வொரு  பகுதி நரம்பும் பாதிக்கப் பட்டு, பிறகு தலைக்கு கீழ் உள்ள பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டது. நரம்பு மண்டலம் முழுவதுமாக பாதிக்கப்பட்ட அவரை திருச்சி, புதுக்கோட்டை, தஞ் சாவூர், மதுரை என பல்வேறு பகுதி மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் சென்றும் முன்னேற்றம் ஏற்படவில்லை. வெங்கடேசனால் பேச,  சாப்பிட மட்டும் முடியுமே  தவிர, மற்றபடி தலைக்கு கீழ் உள்ள பகுதி கள் உணர்ச்சியற்று உள்ளது.  இயற்கை உபாதைகளை யும் படுக்கையிலேயே கழிப் பதால், வெங்கடேசன் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கிறார். இவ்வாறு 8 வருடமாக போராடி வரும் வெங்கடேசனை அவரது தாய் நாச்சம்மை கவனித்து வருகிறார். வயது முதிர்வு காரண மாக அவரும் சர்க்கரை நோயால் அவதிப்படுவதால் வெங்கடேசனை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே உடல் நலம்  பாதிக்கப்பட்டு படுத்த படுக் கையாக கிடக்கும் வெங்கடே சனை அரசு காப்பகத்தில் சேர்க்க தமிழக அரசு உதவ வேண்டும் என அவரது தாயாரும், வெங்கடேசனும் கண்ணீருடன் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.