அறந்தாங்கி, ஏப்.21 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விளானூர் ஊராட்சி வெளியாத்தூ ரில் வசித்து வரும் கணேசன் என்பவருக்கு 30 வருடங்களுக்கு முன்னால் தமிழக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடு புதனன்று இரவு இடிந்து விழுந்தது. அதில் அதிர்ஷ்டவசமாக கணேசன், குழந்தைகள் இருவரும் வெளியில் விளையா டிக் கொண்டிருந்ததால் எந்த ஒரு அசம்பா விதமும் இன்றி உயிர் தப்பினர். அதேநேரம் கணேசன் மனைவி சண்முகவள்ளி இடிந்த சுவற்றின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் இடிபாடு களில் சிக்கிய அப்பெண்ணை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். அவர்களுக்கு குடியிருக்க வீடு இல்லாததால், புதிய வீடு கட்டி கொடுக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.