அறந்தாங்கி, செப்.18 - புதுக்கோட்டை மாவட் டம் நாகுடி ஸ்ரீராம் திருமண மண்டபத்தில் விவசாயிகள் நலனுக்காக செயல்பட்டு கல்லணை கால்வாய் பாசன தாரர், விவசாயிகள் ஒருங்கி ணைப்பு சங்கத்தில் செயலா ளராக பணியாற்றி மறைந்த பழ.சுப்பையா, ஒருங்கிணைப் பாளராக பணியாற்றி மறைந்த மா.முத்துராம லிங்கன், சங்க துணைத் தலைவராக பணியாற்றி மறைந்த ஆத்மநாதன் ஆகிய 3 சங்க நிர்வாகி களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் கொக்கு.மடை ரமேஷ் தலைமை வகித்தார். கௌரவ தலைவர் அ.கணே சன், செயலாளர் க.வீரப்பன் முன்னிலை வகித்தனர். மறைந்த 3 பேரின் உருவப் ்படத்திற்கு ஓய்வு பெற்ற செயற் பொறியாளர் முகமது இக் பால், சங்க ஒருங்கி ணைப்பாளர் பொன்.கணேசன், கெளரவ ஆலோ சகர் ஆ.ராமசாமி, பொருளா ளர் கோவிந்தராஜ் மற்றும் அனைத்து கட்சியினர் 3 பேரின் உருவப்படத்திற்கு மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினர். மேலும் மறைந்த மூன்று பேரின் நினைவாக தென்னை கன்று கள் நடப்பட்டன.