அறந்தாங்கி, ஏப்.24 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் எல்ஷடாய் கேம்பிரிட்ஜ் தனியார் பள்ளி மாணவர் களுக்கு ‘எலைட் உலக ஆசிய சாதனை கழகம், தமிழ் புத்தக சாதனை’ இணைந்து நடத்திய, 3 வயது முதல் 10 வயது வரையிலான மாணவ- மாணவிகள் 300 பேர், மாற்றுத் திறனாளி மாணவ-மாணவி கள் சுமார் 100 பேர் என மொத்தம் 400 பேர் கலந்து கொண்டு, இரண்டு மணி நேரத்தில் 2000 ஓவியங்க ளுக்கு வர்ணம் தீட்டி உலக சாதனையை நிகழ்த்தியுள்ள னர். மேலும் அந்த ஓவியங் களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்து ஏலம் விட்டு, அதன் மூலம் பெறப் பட்ட தொகையை, கொ ரோனா நோய்த்தொற்றால் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த முன்களப் பணியா ளர்களின் குடும்பத்தினருக் கும் மாற்றுத்திறனாளிகளின் கல்வி செலவுக்கும் நன்கொ டையாக வழங்கினர். மேலும் இரண்டாவது உலக சாதனையாக 12 வயது முதல் அனைவரும் கொ ரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற விழிப்பு ணர்வை ஏற்படுத்த, 10 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகல மும் கொண்ட பிரம்மாண்ட மான விரிப்பில் ஐந்து வண்ணங் களில் 18 ஆயிரத்துக்கும் அதிகமான கப்பல், இதயம், மீன் என மாணவ-மாணவி களுடன் ஆசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆரி காமி வடிவங்களை செய்து உலகின் மிகப்பெரிய அளவி லான ‘ஆரிகாமி ஓவியம்’ செய்தனர். உலக சாதனை நடுவர் கள், இந்த சாதனையை ஏற்றுக் கொண்டு உலக சாதனை படைத்த மாணவர்களுக்கும், பள்ளிக்கும் உலக சாதனைக் கான சான்றிதழை வழங்கி னர். ஒரே நாளில் மிக குறைந்த வயதுடைய மற்றும் உடல் குறைபாடு உள்ள மாணவ-மாணவிகளின் மிக பிரம்மாண்டமான இரண்டு உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ். டி.ராமச்சந்திரன், நகர் மன்றத் தலைவர் இரா.ஆனந்த், நகர்மன்ற உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் ஓவியங் களை வாங்கி நன்கொடை வழங்கினார்.