districts

img

ராகேஷ் திகாயத் தாக்கப்பட்டதை கண்டித்து பழனியில் ஆர்ப்பாட்டம்

பழனி, ஜூன் 6- பெங்களூரில் விவசாயிகள் சங்க அகில இந்திய தலைவர் ராகேஷ் திகாயத் பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டதை கண்  டித்தும், ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும் ஒட்டன்சத்திரம் ஒன்றியம் சத்திரப்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க  ஒன்றிய தலைவர் எம்.பழனிச்சாமி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர்கள் சங்க  மாவட்டச் செயலாளர் கே.அருள்செல்வன் சிறப்புரையாற்றினார். சத்திரப்பட்டி முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.கரு ணாகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஜி.பழனிச்சாமி, விவ சாய தொழிலாளர்கள் சங்க ஒன்றியத் தலை வர் ஆர்.ஆறுச்சாமி, ஒன்றியச் செயலாளர் பி.முருகேசன், எஸ்.மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;