பழனி, பி.24- பழனி மலைக்கோவிலில் தரிசனத்தி ற்கு காத்திருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கர்ப்பிணியான நித்யா திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மலைக்கோ வில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல் லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் இல்லா ததால், முதலுதவி சிகிச்சை அளிக்க ஆம்பு லன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைக்கப்பட்டார். கோவில் ஆம்புலன்சிலும் ஆக்சிஜன், வெண்டிலேட் டர் போன்ற உயிர் காக்கும் அவசர சிகிச் சைக்கான மருத்துவ உபகரணங்கள் எதுவு மில்லாமல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி யடைந்த பக்தர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நித்யாவை பத்திரமாக மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர்.