districts

டிஎன்பிஎஸ்சி தேர்வை போல டெட் தேர்வை நடத்த கோரிக்கை

பழனி, ஜன.29- இந்தியாவில் இலவச கட்டாய கல்விச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு டெட் எனப் படும் ஆசிரியர் தகுதி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.  இந்த தேர்வுக்கு மாநிலங்கள் அந்தந்த மாநில கல்வி திட்டங்களுக்கு ஏற்ப தேர் வினை நடத்துகிறது. தமிழகத்தில் 2012 முதல் இதுவரை 5 முறை தேர்வு நடத்தப்பட்டுள் ளது. 2012,2013,2014 இல் நடத்தபட்ட தேர்வு களில் பலர் ஆசிரியர் பணிகளை பெற்ற னர்.  அதன் பிறகு நடத்தப்பட்ட தேர்வுகளில் பணியிடங்களுக்கு ஏற்ப பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் இது குறித்த தகவல்கள் எது வும் இதுவரை வெளிவரவில்லை.  கடந்த வாரம் டெட் தேர்வுக்கான ஆண்டு அட்டவணையை டிஆர்பி வெளியிட்டுள் ளது. இதில் ஜூன் மாதம் டெட் தேர்வு நடத் தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெட் தேர்வுக்கு பல முறைகளை டிஆர்பி பின்பற்றுவதால் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்படுவதுடன் தேர்வில் வெற்றி பெற்றால் முன்பு சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு செல்லும் என்றும், தற்போது வாழ்நாள் முழுவதும் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில் டெட் தேர்வில் வெற்றி பெற் றாலே பணியிடங்களுக்கு ஏற்ப பாட வாரி யாக இடங்களை நிரப்ப அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி டெட் தேர்வினை டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித்தேர்வினை போல நடத்த டிஆர்பி பரிசீலனை செய்ய வேண்டும். தற்போது டெட் தேர்வில் பின்பற்றப்படும் முறைகளை மாற்றி தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் பெற்று எந்த பயனும் இல்லை என தேர்வர்கள் எண்ணுகின்றனர். இவை களை பரிசீலிக்க வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மையம் வலியுறுத்தியுள்ளது.