districts

img

பழனியிலிருந்து அறுபடை வீடு பயணம் தொடங்கியது

பழனி, மார்ச் 6- இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் அறுபடை வீடு பயணம் பழனி தண்டா யுதபாணி சுவாமி கோவி லில் இருந்து தொடங்கியது.  

பழனியில் தொடங்கிய இந்த ஆன்மீகப் பயணம் திருச்செந்தூர்,

பழ முதிர்ச் சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை மற்றும் திருத் தணி ஆகிய கோவில்களில் தரிசனம் செய்த பின் பழனி யில் நிறைவடைகிறது. இதில் பங்கேற்கும் மூத்த  குடிமக்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட்,  முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அட ங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றன.

 மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலு வலர்கள், கோவில் பணி யாளர்கள் மற்றும் மருத்து வக் குழுவினரும் உடன் செல்கின்றனர்.  

இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையா ளர் மாரிமுத்து, நகர்மன்றத் தலைவர் உமாமகேஷ்வரி, நகர்மன்றத் துணைத்தலை வர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.