40 மடங்கு வேகமாக பரவினாலும் ஒமைக்ரான் பாதிப்பை ஏற்படுத்தாது
நீலகிரி, டிச.24-
40 மடங்கு வேகமாக பரவினாலும் ஒமைக்ரான் பாதிப்பை ஏற்படுத்தாது என கூடலூர் அரசு கல்லூரி நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் கண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்டம், கூடலூர் அரசு கல்லூரி நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கோவிட் – 19 டெல்டா வைரஸிற்கும், ஒமைக்ரான் வைரஸிற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், டெல்டா வைரஸ் பரவும் வேகத்தை காட்டிலும், ஒமைக்ரான் 40 மடங்கு அதிவேகமாக பரவக்கூடியது ஆகும். ஆனால், டெல்டா வைரஸின் வீரியத்தில் பத்தில் ஒரு பங்கு வீரியத்தை மட்டுமே கொண்டுள்ளது. எனவே, ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டாலும் அச்சம் கொள்ள தேவையில்லை. ஒமைக்ரான் பாதிப்பால் உயிரிழப்பு என்பது மிக மிக குறைந்தே காணப்படுகிறது. குறிப்பாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகம் காணப்படும் ஐரோப்பிய நாடுகளில்கூட முந்தைய வைரஸின் பாதிப்புகளை காட்டிலும் குறைவான உயிரிழப்பே காணப்படுகிறது. ஒன்றிய அரசின் நிரஞ் ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், இந்தியாவில் 2022 பிப்ரவரி மாத மத்தியல் 3வது அலை உருவாகக்கூடும் என்று கணித்துள்ளார். ஆனால், 2வது அலையில் இருந்த உயிரிழப்புகள் அளவிற்கு இந்த முறை இருக்காது.
குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளில் நோய்க்கான அறிகுறி இல்லாமல் இருப்பது 95 சதவிகித அளவிலேயே இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஐரோப்பாவில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பின்போது 65 ஆயிரம் நோயாளிகளில் ஆயிரம் பேர் இறந்து போயினர். ஆனால், ஒமைக்ரான் பாதிப்பில் 95 ஆயிரம் பேர்களுக்கு 100 பேர் மட்டுமே இறந்துள்ளனர். எனவே, ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. இந்தியாவின் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பவ்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பு குறித்த வல்லுநர் குழுக்களில் பெரும்பாலும் மருத்துவர்களையே சேர்த்துள்ளனர். ஆனால், இந்த வகையான வல்லுநர் குழுக்களில் மைக்ரோ பயாலஜிஸ்ட்-களைத்தான் சேர்ந்திருக்க வேண்டுத்ம. காரணம் நுண்ணுயிரியல் குறித்த விரிவான தெளிவான ஆழங்கால்பட்ட புரிதல் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்களுக்குத்தான் இருக்கும்.
எனவே, தமிழக அரசு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளும் டாஸ்க்போர்ஸ் எனப்படும் கொரோனா தடுப்பு வல்லுநர் குழுக்களில் மைக்ரோபயாலஜிஸ்டுகளை இடம்பெற வைக்க வேண்டும். தமிழகத்திலுள்ள நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்கள் சிறப்பான முறையில் ஒமைக்ரான் குறித்த அடிப்படை புரிதல்களை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் ஏற்படும் அச்சத்தைப் போக்க வேண்டும், என்றார்.