districts

img

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தாக்கிய பாஜக-வினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உதகை , டிச. 1- ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை  தாக்கிய பாஜகவினரைக் கைது செய்ய  வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சங்கத்தினர் செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கண்மூ டித்தனமாக தாக்குதல் நடத்திய பாஜகவி னரைக் கைது செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதி யாக, நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  வளர்ச்சித் துறை அதிகாரிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.எஸ் சலீம், செய லாளர் சிவக்குமார், அரசு ஊழியர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் அ.ர.ஆஸரா, பொருளாளர் கே.ஆனந்தன், சத்துணவு ஊழியர் சங்கத்தின் சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

;