districts

உதகையில் அஞ்சலக முகவர் சேர்ப்பு

உதகை, நவ 28- உதகையில் அஞ்சலக முகவர் சேர்ப்பு தேர்வானது நடை பெறவுள்ளதாக அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப் பாளர் குணசீலன் விடுத்துள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது, நீலகிரி அஞ்சல் கோட்டத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக முக வர்களை பணியமர்த்த உள்ளது. இத்தேர்வில் 18  முதல் 50 வயதிற்குட்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்குபெறலாம். அஞ்சலக ஆயுள் காப்பீடு நேரடி முகவ ராக பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான நேர்காணல் வரும் டிச.9ஆம் தேதியன்று மாலை 4 மணியளவில் உதகையில் உள்ள அஞ்சலக கண்காணிப்பாளர்  அலுவல கத்தில்  நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வோர் புகைப்படம் 2, ஆதார் கார்டு நகல், பான் கார்டு நகல் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றி தழ் நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.  மேலும், விவரங்களுக்கு  0423-2444 193,0423 2443785 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

;