districts

அவதூறை அள்ளி வீசிய அதிமுக எம்எல்ஏ-விற்கு சிபிஎம் கடும் கண்டனம்

நாமக்கல்.டிச.28- நாமக்கல் கீரம்பூர் ஊராட்சி மன்ற அரசு விழாவில் கலந்து கொண்ட மார்க் சிஸ்ட் கட்சியின் ஊராட்சி வார்டு உறுப்பி னரை,  அதிமுகவில் இணைந்து விட்டார் என்று உண்மைக்கு புறம்பாக அறிவித்த நாமக்கல் சட்டமன்ற உறுப்பினருக்கு மார்க் சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள் ளது.  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக் கல் மாவட்டக்குழு உறுப்பினரும், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செய லாளராகவும் செயல்பட்டு வருபவர் கு.சிவ ராஜ். இவர் கீரம்பூர் ஊராட்சியில் 3 ஆவது வார்டு உறுப்பினராக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டு தற்போது மக்கள் பணியாற்றி வருகிறார்.  

இந்நிலையில், ஞாயிறன்று கீரம்பூர் ஊராட்சி, ஆண்டிபட்டி புதூரில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் கல் பதிப்பதற் காக அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி அரசு விழாவாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட நாமக்கல் சட்டமன்ற உறுப்பி னர் கே.பி.பி.பாஸ்கர் உள்ளிட்டோருக்கு மரியாதை நிமித்தமாக சிவராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார். இதைத் தொடர்ந்து கே.பி.பி.பாஸ்கர் எம்எல்ஏ., வார்டு உறுப்பினரான கு.சிவராஜிக்கு துண்டு  அணிவித்து, அவர் அதிமுக கட்சியில் இணைந்து விட்டார் என்று  உண்மைக்கு புறம்பாக அறிவிப்பு செய்துள்ளர்.

இதற்கு கு.சிவராஜ் உடனடியாக எதிர்ப்பு தெரி வித்துள்ளார்.  அதேநேரம், நாமக்கல் சட்டமன்ற உறுப்பி னரின் இச்செயலானது சிறந்த முறையில் மக்கள் பணியாற்றி வரும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியரை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஒரு செயலாகவே அமைந்துள்ளது. இத்தகைய அநாகரீகமான செயலில் ஈடுபட்ட நாமக்கல் சட்டமன்ற உறுப்பினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்டக் குழுவின் சார்பில் கடும் கண்டனத்தை தெரி வித்து கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.