நாமக்கல், மார்ச் 1- நாமக்கல்லில் புத்தகத் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் செவ்வாயன்று தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக புத்தகத் கண் காட்சியை நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட நூலகத் துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் புத்தக பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) இணைந்து நடத்து கின்றன. இந்த கண்காட்சி நாமக்கல் – திருச்செங்கோடு சாலையில் உள்ள நல்லிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிப்.28ஆம் தேதியன்று துவங்கி மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கண்காட்சியில், 100 அரங்குகள் இடம் பெறுகின்றன. புத்தகத் கண்காட்சியையொட்டி மாலையில் கலை நிகழ்ச்சிகள், இலக்கிய சொற்பொழிவுகள் நடைபெறு கின்றன. புத்தக திருவிழா துவக்க நிகழ்ச்சியில்,மாவட்ட காவல் கண்காணிப்ளர் கலைச்செல்வன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் சட்டமன்ற உறுப் பினர் பெ.இராமலிங்கம், நகர் மன்றத்தலைவர் கலாநிதி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். முன்னதாக, நாமக்கல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், மாவட்ட ஆட்சியரிடம் ரூ.1 லட்சம் நன் கொடை வழங்கினார்.