districts

img

பேரூராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி

நாகர்கோவில், மே 29- கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சி மன்ற தலைவர் கள், துணை தலைவர்களுக் கான  பயிற்சி ஆட்சியர் மா.அர விந்த தலைமையில் சனியன்று (மே 28) நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வரு வாய் கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் நிர்வாக அமைப்பு, தேர்ந்தெடுக்கப்பட்டோ ருக்கான அதிகாரங்கள் கட மைகள் மற்றும் பொறுப்பு கள், மாநில நகர்ப்புற மேம் பாட்டு திட்டங்கள், மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்கள், ஒப்பந்தப்புள்ளி நடைமுறை சட்ட விதிகள், பணிகள் செயல்படுத்துதல், கட்டட வரைபட அனுமதி, மனைப்பிரிவு அங்கீகாரம் தொடர்பான விதிகள் மற்றும் நடைமுறைகள், நகராட்சி நிதி ஆதாரங்கள் மற்றும் கணக்கியல், நகராட்சி வரவு செலவு திட்டங்கள், திட்ட மிடல், மக்கள் தொடர்பு மற்றும் பொதுவான நடை முறைகள் குறித்து பேரூ ராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர் களுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ப.குற்றாலிங்கம், நாகர்கோ வில் மாநகராட்சி பொறியா ளர் த.பாலசுப்பிரமணியன், நாகர்கோவில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் முகம்மது ஷெரிப், செயல் அலுவலர் (நிர்வாகம் -1) பெ.இராஜேஸ்வரன், மேற் பார்வையாளர் (மாவட்ட நகர்ப் புற ஊரமைப்பு திட்டம்) ஸ்ரீ குமார், உதவி இயக்குநர் (ஓய்வு) உள்ளாட்சி தணிக்கை முத்துசுவாமி, செயல் அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.