districts

தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் குறித்து ஆய்வு

நாகர்கோவில், ஜூன் 10- கன்னியாகுமரிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (டி ஏ  என் எப் ஐ என் இ டி ) திட்டம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பாரத்நெட் ஃபேஸ் II திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம  ஊராட்சிகளையும் தமிழ்நெட் திட்டத் தின் மூலம் நகரத்தினையும் 1 ஜிபி பிஎஸ் அதிவேக அலைகற்றை வழியாக  தகவல் தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்த தொலைநோக்கு பார்வை யுடன் தமிழ்நாடு கண்ணாடி இழை  வலையமைப்பு நிறுவனம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் ஏ,பி,சி,டி நான்கு தொகுப்புகளாக பிரிக்  கப்பட்டு டி தொகுப்பில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட 10 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. ஐடிஐ, பெங்களுரு நிறுவனத்திற்கு டி தொகுப்புக்கான வேலை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 கிராம ஊராட்சிகளி லும் கண்ணாடி இழை கேபிள் அமைக்  கும் பணிக்கான சர்வே முடிவடைந்து உள்ளது. 189 கி. மீ பூமிக்கு அடியிலும் 320 கி. மீ  மின்கம்பம் வழியாகவும் கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் பணி நடைபெற உள்ளது. ஒரு வருட காலத்தில் பணி முடிவடையும். குமரி மாவட்டத்தில் அதிக அளவில் மரங்கள் காணப்படு வதாலும் அதிக அளவில் காற்று வீசுவதா லும் மின் கம்பம் மூலம் கேபிள் இணைக்கும் கிராமங்கள் குறித்த அறிக்  கையினை முன்னதாக அளிக்கவும் தேவைப்பட்டால் அவற்றை பூமிக்கு  அடியில் மாற்றம் செய்ய உரிய நட வடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப் பட்டது.  மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் நிறுவனம்  மற்றும் பாரத் சஞ்சார் நிகாம் லிட்  நிறுவனங்களையும் இணைக்க நட வடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துண்  டிக்கப்படும் குடிநீர் இணைப்புகள் உட னுக்குடன் சரி செய்யப்படுவதை குடிநீர் வடிகால் வாரியத்துடன் இணைந்து கண்காணிக்கவும் ஊராட்சி தலைவர் களுக்கு உரிய அறிவுரை வழங்கி ஒத்து ழைப்பு நல்க நடவடிக்கை எடுக்கவும் தெரிவிக்கப்பட்டது.  கிராம ஊராட்சிகளின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான மிக  முக்கியமான திட்டமானதால் அனைத்து  துறை/நிறுவன அலுவலர்களும் முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்  கொள்ளப்பட்டது என தெரிவிக்கப் பட்டது. இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப வியல் அமைச்சர் த. மனோ தங்கராஜ் ,மாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த் தலைமை வகித்தனர்.