districts

அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை பள்ளி மாணவர்களுக்கு விற்ற கடை சீல் வைப்பு

நாகர்கோவில், டிச.11- கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட சாணிவிளை பகு தியில் உள்ள பள்ளிகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட கூல் லிப் மற்றும் கணேஷ் போன்ற போதைப்பொருட்களை அருகில் உள்ள கடையில் விற்பதாக மாவட்ட சமூக நல அலுவலர் அவர்களுக்கு  தகவல்  கிடைக்  கப் பெற்றது. புகார் அடிப்படையில் மாவட்ட  சமூகநல அலுவலருடன் புகையிலை தடுப்பு அலுவலர் இணைந்து பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள பலசரக்கு கடையில் ஆய்வு மேற்கொண்டனர். கடையில் பலசரக்கு பொருட்களுடன் அரசால் தடைச்செய்யப்பட்ட கணேஷ்  மற்றும் கூல் லிப் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. ஆய்வில் 2.376கி.கிராம் கணேஷ் புகையிலை மற்றும் கூல் லிப் 250 சிறிய பொட்டலங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. கடையில் விசாரித்த போது கடையின் உரி மையாளர் விஜயகுமார் காட்டுவிளை, சாணிக்கரையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட கடையினை உடனடியாக மூடி சீல் வைத்திட கூறியதின் பேரில் விஜயகுமார் நடத்திய கடைக்கு அபராதம் விதித்து மாவட்ட சமூக நல அலுவலரால், திருவட்டார் வருவாய் அலுவலர், உணவு பாதுகாப்பு அலுவலர், திருவாட்டார் காவல்துறையினர் முன்னி லையில் சீல் வைத்து மூடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா.  கூல் லிப், கணேஷ் போன்ற தடைசெய்யப் பட்ட போதைப்பொருட்கள் குறிப்பாக பள்ளி  கல்லூரி மாணவர்களிடையே பயன்படுத் தும் பழக்கம் அதிகமாகி வருகிறது. இத னால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படு வதோடு அவர்களிடம் ஒழுக்ககேடும் ஏற்படுகிறது.

இதனை பயன்படுத்துபவர்கள் கோபம் போன்ற பல எதிர்மறையான குணங்களால் சண்டை சச்சரவுகளில்  ஈடுபடுகின்றனர்.  இந்த போதைப்பொருட்கள் சாக்லேட் போன்ற பல்வேறு வாசனை பொருட்கள் வடிவத்திலும் பவுடர் வடிவத்திலும் அதிக மாக புழக்கத்தில் உள்ளது. பெற்றோர் மற்  றும் ஆசிரியர்கள் குழந்தைகளை நெருக்க மாக கண்காணித்து ஆராய வேண்டும். குழந்தைகளின் நடடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டால் பிள்ளைகளின் ஸ்கூல் பேக், ஆடைகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட் களை மாணவர்களுக்கு தெரியாமல் அடிக் கடி ஆய்வு செய்ய வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால் ஆசிரியர்களிடம் பேசி  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்த ஆரம்  பித்துவிட்டால் அதிலிருந்து வெளிவரு வது எளிதானதல்ல .இந்நிலை தொடர்ந்  தால் அவர்களுக்கு கட்டாயம் சிகிச்சை  தேவைப்படும். ஏனெனில் போதைப் பொருள் பயன்படுத்துதல் ஒரு நோய் என் பதை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும். நல்உள்ளம் கொண்ட அனை வரும் இந்த போதைப்பொருள் பயன்பாட் டில் உள்ள நம் உறவுகளையும் நண்பர் களையும் மீட்டெடுக்க உதவி செய்ய  வேண்டும். இது தொடர்பான உதவி தேவைப்படுவோர் மாவட்ட சமூகநல அலு வலரை தொடர்பு கொள்ளலாம். போதைப்பொருள் பயன்படுத்துவேர் மற்றும் விற்பனை செய்வோர் பற்றிய  விபரங்கள் தெரிந்தால் மாவட்ட கண்கா ணிப்பாளரின் சிறப்பு வாட்ஸ்அப் எண்ணான 7010363173 ல் குறுஞ்செய்தி மற்றும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம். விவரம், அனுப்புபவரின் தனிப்பட்ட விபரங்கள் கேட்கப்படமாட்டாது. இரகசியம் காக்கப்  படும். எனவே பொதுமக்கள் தைரியமாக புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்  தலைவர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.