நாகர்கோவில், ஜூன் 22- சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளருமான நம்பிராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுரைப்படி, குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் மாவட்ட மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வருகிற 26 ஞாயிறன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சமா தானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் விபத்து இழப்பீடு, உரிமையியல், உரிமையியல் மேல் முறையீடு, செக் மோசடி, மணவிலக்கு தவிர்த்து குடும்ப நல வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகள் போன்றவை விசாரணை க்கு எடுத்துக் கொள்ளப்படும். இங்கு வழக்குகள் முடிப்பது சம்பந்தமாக வழக்காடுபவர்களோ அவர்களின் சார்பில் வழக்கறி ஞர்களோ வருகிற 24 ஆம் தேதிக்குள் நாகர்கோ வில் நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாற்றுமுறை தீர்வு மைய கட்டிடம் என்ற முகவரியிலோ, நேரடியாகவோ அல்லது 04652-291744 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இதன்மூலம் நிலுவையில்உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.