districts

img

பேச்சிப்பாறை அணை அடிவாரத்தில் மணல் கொள்ளை சிபிஎம் தலையீட்டால் அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவில், மார்ச் 5- பேச்சிப்பாறை அணையின் அடி வாரத்தில் இருந்து கடந்த ஒரு மாதமாக மணல் அள்ளி கடத்தப்படுவதை தடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  முயற்சி மேற்கொண்டுள்ளது. அதி காரிகள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் நீர்  ஆதாரமாக விளங்குவது பேச்சிப் பாறை அணை. அணையின் வடக்குப் பகுதியில் உபரி நீர் வெளியேறும் பாழா ற்றின் கரை குன்றுபோல் உயர்ந்து இயற்கை அரணாக உள்ளது. கடந்த  ஒரு மாதமாக அணையின் அடி வாரத்தில் உள்ள இந்த பகுதியில் இருந்து ஜேசிபி மூலம் மணல் அள்ளி லாரிகளில் கடத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் நூறு லாரி அளவுக்கு மணல் கடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு தகவல் தெரிந்ததும் செவ்வாயன்று (மார்ச் 5) கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், வட்டாரச் செயலாளர் பி.விஸ்வாம்பரன், சிஐடியு தலைவர் நடராஜன் ஆகியோர் மணல் அள்ளும் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மணல் அள்ள நெடுஞ்சாலைத்துறை அனுமதி உள்ளதுபோல் ஒரு கடிதத்தை மணல் அள்ளும் நபர்கள் காட்டியுள்ளனர். ஆனால், மணல் அள்ளுவதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து கட்சி யினர், பொதுப்பணித்துறை அதிகாரி களையும், திருவட்டார் வட்டாட்சியரை யும் தொடர்பு கொண்டு பேசியுள்ள னர். இந்நிலையில் பொதுப்பணித் துறையினர் குலசேகரம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் நடவடிக்கை எடுப்பதாக கூறி ஜேசிபி மற்றும் டாரஸ் லாரிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அணையின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மணல் அள்ளிக்கடத்திய கும்பலையும், இதற்கு உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.