districts

மார்ச் 25 மீனவர் குறைதீர் கூட்டம்

நாகர்கோவில், மார்ச் 22- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலை மையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நாஞ்சில் கூட்ட  அரங்கில் வைத்து வருகிற மார்ச் 25 வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற  உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசுத் துறைகளால் நிறைவேற்றப்படவேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் / தேவைகள் அடங்கிய மனுக்களை 25.03.2022 அன்று நடைபெறும் மீனவர்  குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரில் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. பிற அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கை களை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி  மனுக்களாக வழங்கிட வேண்டும்.  25.03.2022 அன்று பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட  பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விபரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவ லகத்தில் நடைபெறும் அடுத்த மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும். கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் மீனவர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் முகக்கவ சம் அணிந்து மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரி விக்கப்பட்டுள்ளது.