districts

img

கன்னியாகுமரி மாவட்ட  புதிய ஆட்சியர் தொடர் ஆய்வு

நாகர்கோவில், பிப். 8 கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர்  பி. என். ஸ்ரீதர்,  பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக்  முன்னிலை யில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் வட்டங்களுக்குட்பட்ட வருவாய் கிராமப்பகுதிகளில் நடை பெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து வருவாய் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.  குறிப்பாக, ஆதரவற்றோர் விதவை சான்றிதழ், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதியோர் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ் குறித்து துறைசார்ந்த அலுவலர்களிடம் கேட்ட றிந்ததோடு, சார் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒவ்வொரு அலுவலரிடமும் அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேட்டறிந்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து கோரிக்கைகளையும் பரிசிலித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.  இந்த ஆய்வில், பத்மநாபபுரம் சார் ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் தாஜ் நிஷா உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

;