districts

img

பிரதமர் மோடியைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், மார்ச் 15 கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் வெள்ளிக் கிழமை பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற வந்த நிலையில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

10 ஆண்டுகால மக்கள் விரோத  பா.ஜ.க. ஆட்சியினால் பொருளாதாரப்  பேரழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சி யில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப் பட்டு வருகிறது.

சமீபத்தில்  சென்னை மற்றும் தென் மாவட்டங்கள் மழை  வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட  போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தற்போது  தமிழகத்திற்கு ஐந்தாவது முறையாக வந்துள்ளார்.     தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற    இந்த  கருப்பு கொடி    ஆர்ப்பாட்டத்தில் எம்.பி, விஜய் வசந்த்., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினு லால்சிங், பொருளாளர் ஐ.ஜி.பி.லாரன்ஸ், மாநில துணைத் தலை வர் வக்கீல் ராபர்ட் புரூஸ், குமாரபுரம்  பேரூராட்சி தலைவர் ஜான் கிறிஸ் டோபர், திருவட்டார் வட்டாரத்  தலை வர் வக்கீல் ஜெபா, மாவட்ட காங்கிரஸ்  பொதுச் செயலாளர் ஜான் விக்னேஷ், முன்னாள் மாவட்டத் தலைவர் தாரகை கட்பர்ட், நிர்வாகிகள் குமார், செல்வின் ராஜ் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.