நாகர்கோவில், ஏப்.25- நாகர்கோவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டு 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் சுத்தி கரிப்பு நிலையம் உள்ளது.
இந்த சுத்திகரிப்பு நிலை யத்தில் குடிநீரில் கலக்கும் குளோரின் வாயு சிலிண்டரில் ஏப்ரல் 25 வியாழனன்று காலை கசிவு ஏற்பட்டது. அங்கு பணி யில் ஈடுபட்ட 3 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களை மீட்ட சக பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் அப்பகுதி சுற்று வட்டார மக்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து மீட்புப்பணிக்கு சென்ற தீயணைப்பு வீரர்களில் 2 பேர் மயக்கம் அடைந்தனர்.
இதையடுத்து குளோரின் வாயு கசிவு நிறுத்தப்பட்ட தால் சிறிது நேரத்தில் சகஜ நிலை ஏற்பட்டது.