districts

சிஐடியு ஆட்டோ சங்கத் தலைவர் மீது தாக்குதல்

நாகர்கோவில், மார்ச்.12- குமரி மாவட்டத்தில் ஆட்டோ சங்கத் தலைவர் மீது தாக்குதல் நடத்திய முகமூடி குண்டர்களை கைது செய்யு மாறு சிஐடியு வலியுறுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பட்டகசாலியன் விளை சிஐடியு ஆட்டோ தொழி லாளர் சங்கத் தலைவர் சுரேந்திரன், கருப்புத் துணி போர்த்திய அடை யாளம் தெரியாத மர்ம நபர்க ளால் தாக்குதலுக்குட்பட்டு ஆசாரிப் பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இவர் அனுமதிக் கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் குறித்து சுரேந்திரன் கூறுகையில், நான் பட்டகசாலியன் விளை ஐந்து சந்து விநாயகர் கோவில்  ஆட்டோ ஸ்டாண்ட் சிஐடியு கிளை தலைவராக உள்ளேன் 9.3.2022 அன்று  இரவு 9.20 மணி அளவில் இரண்டு முறை எனது கைப்பேசியில் தொடர்பு  கொண்டு ஆட்டோவை சவாரிக்கு அழைத்தனர். இரவு ஆகிவிட்டதால் வருவதற்கு சிரமம் என்று கூறினேன். தொடர்ந்து கைப்பேசிக்கு அழைப்பு  வந்தது. அதற்கு மேலும் மறுக்க முடியாமல் சவாரிக்காக கூப்பிட்ட இடத்திற்கு சென்றேன். அங்கு நான்கு நபர்கள் கருப்பு உடை அணிந்து கருப்பு துணியால் முகத்தை மூடியபடி நின்றனர். இதைக்  கவனித்து நான் உஷார் ஆவதற்குள் பக்கத்தில் ஒளிந்திருந்த கருப்பு உடை அணிந்து முகத்தை மறைத்தி ருந்த வேறு இரண்டு நபர்கள் திடீரென  என்னை நோக்கி வந்து இரும்பு கம்பி யாலும் கட்டையாலும் தாக்கி எனது கையை உடைத்தனர்.

நான் சத்தம் போடவும் அருகில் உள்ள வீட்டார் வெளியே வந்தனர். வெளிச்சத்தை பார்த்தவுடன் நின்றிருந்த 4 பேரும் ஓடினர். மற்ற 2 பேரும் மேலும் தாக்கு தலில் ஈடுபட்டனர். மேலும் என்ன கீழே  தள்ளி காயப்படுத்தினர். இதனால் தலையின் பின்பக்கத்தில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த உறவினர்களும்அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் என்னை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.  பரிசோதனையில் இடது கை  முறிந்துள்ளது. வலது கண் பகுதியில்  இடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள் ளது. கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனக்கு யாரிடமும் பகை இல்லை என்றார். இந்நிலையில் சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும்  சம்பவத்தில்ஈடுபட்டதாக கருதப்படும் விக்கி என்பவரி டம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.  தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து தக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று சுரேந்திரன்  வலியுறுத்தினர்.