நாகப்பட்டினம், டிச.23- ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட வர்க்க ஒற்றுமையின் அடை யாளமாக திகழும் வெண்மணி தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு டிசம்பர் 25 (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் நடைபெற இருக்கிறது.
1968 டிசம்பர் 25 அன்று நாகப் பட்டினம் மாவட்டம் கீழ்வெண் மணி கிராமத்தில் நடைபெற்ற வர்க்க போராட்டத்தில் 44 விவ சாய பெருங்குடி மக்கள் உயி ரோடு தீயிட்டு கொளுத்தப்பட்ட னர். அதன் 55 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு கீழ்வெண்மணி தியா கிகள் நினைவகத்தில் நடை பெற இருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து தலைமையில். கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செங்கொடி யேற்றி வைக்கிறார்.
அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன், மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பி னர்கள் ப.செல்வசிங், கே.பால பாரதி, சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன், வி.தொ.ச அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, விதொச மாநிலத் தலைவ ரும், கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, விச மாநில பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன், விதொச மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் அஞ்சலி செலுத்து கின்றனர்.
மேலும், சிபிஐ தேசிய குழு உறுப்பினர் கோ.பழ னிச்சாமி, சிபிஐ நிர்வாக குழு உறுப்பினரும், நாகை நாடா ளுமன்ற உறுப்பினருமான எம்.செல்வராஜ், சிபிஎம் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், திருவாரூர் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி, மயிலாடு துறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் சிவகுரு பாண்டி யன், வி.ச. மாநில துணைத் தலைவர் வி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
கட்சியின் நாகை மாவட்டக் குழு சார்பில் ஏற்பாடு செய்யப் படும் இந்த அஞ்சலி செலுத் தும் நிகழ்வில் புதுவை சப்தர் ஹஷ்மி குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.