districts

கரை  ஒதுங்கிய ஆளில்லா  மர்ம படகு

வேதாரண்யம், மார்ச் 20 -  நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இரண்டு  கிலோமீட்டர் தொலை வில் காத்தான் ஓடை என்ற கடற்கரை  பகுதி உள்ளது. இங்கு இலங்கையைச் சேர்ந்த ஒரு  பைபர் படகு மட்டும் கரை ஒதுங்கியுள்ளது தகவலறிந்த  கோடியக்கரை சுங்கத்துறை அதிகாரிகள், கண்காணிப்பா ளர் ஸ்டெல்லா மேரி உத்தர வின்பேரில்சம்பவ இடத்திற்கு சென்று படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த படகு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்த படகா?அல்லது கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட படகா? இப்படகில் யாரும் வந்தனரா? என்பது குறித்தும் விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.