நாகப்பட்டினம், ஜூலை 15 - தமிழ் மொழிக்காக தன்னை முழுவது மாக அர்ப்பணித்துக் கொண்ட தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளின் 147 வது பிறந்த நாள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடி யில் 1876 ஜூலை 15 மறைமலை அடிகள் பிறந்தார். இவருடைய இயற்பெயர் வேதா சலம். இயற்பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். தமிழ் மொழியில் பிற மொழிகள் கலவாமல் இருக்க தனித் தமிழ் இயக்கத்தை கண்டார். முல்லைப் பாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி, கோகிலாம்பாள் கடிதம் உள்ளிட்ட நூல்களை யும், சாகுந்தலம் என்ற நாடகத்தையும் எழுதி யுள்ளார். மறைமலையடிகளின் 147 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள அவருடைய சிலைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் நாகப்பட்டி னம் மாவட்டக் குழு சார்பில் மாலை அணி விக்கப்பட்டது. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி மறைமலை அடிகளார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்க மாவட்ட தலைவர் கவிஞர் ஆவ ராணிஆனந்தன், மாவட்ட செயலாளர் ஆதி. உதயகுமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் மறை மலையடிகளார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செய்தனர்.