நாகப்பட்டினம், மார்ச் 18 - நாகப்பட்டினம் மாவட்டம் குருமனாங்குடி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் அடங்கிய மனு பெறப்பட்டது. வயது முதிர்ந்தவர்களுக்கு ஊன்றுகோல், குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டை, வயது முதிர்ந்தோர் உதவி தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் திட்ட இயக்குனர், கீழ்வேளூர் ஒன்றிய பெருந்தலைவர் வாசுகி நாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் அனிதா நேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.