வடகிழக்குப் பருவமழை துவங்கி, நாகப்பட்டினம் மாவட்டத் தில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நவ.14 அன்று சராசரி யாக 113 மி.மீ மழை பெய்துள்ளது. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மற்றும் காய்கறி செடிகள் மூழ்கியுள்ளன.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மழைக்கான அவசர உதவி எண் கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்ட ணமில்லா தொலைபேசி - 1077, தொலைபேசி - 04365251992, வாட்ஸ்அப் - 9487550811 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம்
குறுவை சாகுபடியில் அறு வடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள் ளன. அறுவடை செய்த நெல்மணி களை உலர்த்துவதற்கு இடமில்லா மல் விவசாயிகள் அவதியுறுகின்றனர்.
இந்நிலையில் சம்பா சாகுபடி யில் நேரடி விதைப்பு மற்றும் நடவு மூலம் செய்த நெற்பயிர்கள் முற்றி லுமாக நீரில் மூழ்கியுள்ளன. கீழை யூர், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம், நாகப்பட்டினம், திருமருகல் ஆகிய ஒன்றியங்களி லும் மழையின் தாக்கம் அதிகரித் துள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார். பாப்பா கோவில், நரியங்குடி, தெத்தி ஆகிய கிராம மக்களிடம் மழை பாதிப்புகளை கேட்டறிந்து, முன் னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எடுத்துக் கூறினார். நவம்பர் 14 அன்று மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் வழக்கத்திற்கு மாறாக கடல் அலைகளின் சீற்றம் கூடுதலாக உள்ளது. மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விடிய விடிய கனமழை பெய்த தால், ஒரு சில இடங்களில் குடி யிருப்புகளில் தண்ணீர் தேங்கி யுள்ளது. பாதிப்புக்குள்ளான பகு திகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக கள ஆய்வு செய்து, தேவையான அனைத்து நட வடிக்கைகளும் மேற்கொள்ளப்படு கின்றன.