districts

img

கீழ பிடாகையில் பகுதி நேர அங்காடியை நாகை மாலி எம்எல்ஏ திறந்துவைத்தார்

நாகப்பட்டினம், பிப்.3-  நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் கீழப்பிடாகை ஊராட்சியில் பகுதி நேர அங் காடியை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி.நாகைமாலி திறந்துவைத்தார்.  கீழ்வேளூர் சட்டமன்றத் திற்குட்பட்ட கீழப்பிடாகை ஊராட்சியில் தாய் அங்காடியில் இருந்து பிரித்து பகுதிநேர அங்காடி செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று  பகுதி நேர அங்காடி திறந்து வைக்கப்பட்டது.  இந்நிகழ்வில், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி.நாகை மாலி கலந்துகொண்டு பகுதிநேர அங்காடியை திறந்து வைத்தார். இதில், பொது விநி யோகத் திட்ட துணைப் பதிவாளர் கனகசபாபதி, திருப்பூண்டி கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.வேதையன், திருப்பூண்டி கூட்டுறவு வங்கியின் செய லாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி  குழு உறுப்பினர் கௌ சல்யா இளம்பரிதி, கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வ ராணி ஞானசேகரன், சிபிஎம் கீழையூர் கிழக்கு ஒன்றிய செய லாளரும், திருப்பூண்டி கூட்டுறவு வங்கியின்  இயக்குநர்களில் ஒருவருமான எம்.அப்துல் அஜீஸ், கீழப்பிடாகை ஊராட்சி மன்ற தலைவர் வேதநாயகி பால சுப்ரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினர் கமலாசூரியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

;