districts

img

சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு

நாகப்பட்டினம், டிச.26- நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரம் ஊராட்சியில்  ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர் களுக்கு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் வி.பி.நாகை மாலி அஞ்சலி செலுத்தினார்.  கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட  சுனாமி ஆழிப்பேரலையால், தமிழக  கடலோர கிராமங்களைச் சேர்ந்த ஆயி ரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதன் 18 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி திங்களன்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களின் கடலோர கிராமங்களில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்குட்பட்ட காமேஸ்வரம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி அஞ்சலி செலுத்தி னார். வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் அருள்தாஸ், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜோதி பாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூணில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மாவட்ட ஆட்சியர் மரு.அருண் தம்புராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தலைவர் உ.மதிவாணன், நாகை சட்ட மன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநாவஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை 
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சந்திரபாடியில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா எம்.முருகன், மயிலாடு துறை மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ், தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், மீனவ பஞ்சாயத்தார்கள், மீனவர் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் தரங்கம்பாடி மீன் ஏலக் கூடத்திலிருந்து அமைதி பேரணியாகச் சென்று சுனாமி  நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.