நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஒன்றியம் ஆய்மூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜெயசித்ரகலா தலைமை வகித்து, பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.