districts

img

20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்த விழா

நாகப்பட்டினம், பிப்.20 - நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ராராந்திமங்கலம் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்த விழா நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ராராந்திமங்கலம் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒன்றியச் செயலாளர் ஜி.எஸ்.ஸ்டாலின் பாபு தலை மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டன. கட்சியின் செங்கொடியை ஏற்றி வைத்து நாகை  மாவட்ட செயலாளர் வீ.மாரிமுத்து, கட்சியில்  இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தி பேசினார். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னருமான வீ.பி.நாகைமாலி, மாவட்ட குழு  உறுப்பினர் பி.எம்.லெனின், ஒன்றிய குழு உறுப்பினர் பி.எம்.மார்க்ஸ், பி.எம்.கஸ்தூரி, எம்.ஜெயபால், ஜி.பாரதி ஆகியோர் கலந்து  கொண்டனர். கிளைச் செயலாளர் ரட்சகநா தன் நன்றி கூறினார்.