நாகப்பட்டினம், டிச.30 - விவசாயிகளின் வாழ்வாதாரமான நெற்ப யிர்களை நாசமாக்கும் பன்றிகளை பிடிக்கக் கோரி நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கடை தெருவில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது. இதற்கு எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிபிஎம் நாகை மாவட்ட செயலா ளர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றி னார். நாகை ஒன்றிய பகுதிகளான சிக்கல், மஞ்சகொல்லை, பாப்பாகோவில், பொர வாச்சேரி, புத்தூர் உள்ளிட்ட நாகை ஒன்றிய பகுதிகளில் நெல் விவசாயம் செய்யப்பட்டிருக் கிறது. இப்பகுதிகளில் வளர்ப்பு பன்றி களின் தொல்லை பெருகிவிட்டது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நாச மாக்கும் இப்பன்றிகளை பிடிக்கக்கோரி பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் பன்றி உரிமையாளர்கள் எவ்வித பொறுப்பு ணர்வும் இல்லாமல், பன்றிகளை காடுகளில் அலையவிட்டுள்ளனர். மேய்ச்சலுக்கு செல்கிற பன்றிகள் விவசாயம் செய்துள்ள வயல்களில் நெற்பயிர்களை நாசமாக்குகின்றன. இப்பிரச் சனை குறித்து பலகட்ட போராட்டம் நடத்தி யும் எவ்வித பலனும் இல்லை. இதனால் நெற்பயிர்களை நாசமாக்கும் பன்றிகளை பிடிக்கக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திர போஸ், விச மாவட்ட செய லாளர் கோவை.சுப்பிரமணியன், நாகை வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.வி.ராஜா, விச ஒன்றிய செயலாளர் ஏ.கே.குமார், சிக்கல் ஊராட்சி மன்ற தலைவர் விமலாராஜா ஆகி யோர் கண்டன உரையாற்றினர். பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், நாகை வட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில், 4-1-2023-க்கு பிறகு விவசாயப் பகுதிகளில் மேயும் அனைத்து பன்றிகளையும் பிடிக்க நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதன் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.