districts

img

பொரவச்சேரி ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்குக! சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 25 -  நாகப்பட்டினம் மாவட்டம் நாகை ஒன்றி யம் பொரவச்சேரி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசா யிகள் சங்க ஒன்றிய செயலாளர் ஏ.கே. குமார் தலைமை வகித்தார். சிபிஎம் நாகை  மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கோரிக் கைகளை விளக்கி உரையாற்றினார்.  நூறு நாள் வேலைத் திட்டத்தில் பதிவு  செய்யப்பட்டு அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். ரூ.281 கூலியை உறுதிப்படுத்த வேண்டும். குடிமனை பட்டா இல்லாதோருக்கு குடி யிருக்க மனை வழங்க வேண்டும். ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் முறையாக வழங்க  வேண்டும். ஊராட்சியில் பணிபுரியும் பணித் தள பொறுப்பாளர் மற்றும் துப்புரவு பணியா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.  ஊராட்சியில் உள்ள அனைத்து சுடுகாடு களுக்கும் மின் வசதி, சுற்றுச்சுவர், தண்ணீர்  வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ், வடக்கு ஒன்றிய செய லாளர் வி.வி.ராஜா ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.