நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சிக்குட்பட்ட போலீஸ் லயன் பகுதியில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி அடிக்கல் நாட்டினார். கீழ்வேளூர் பேரூராட்சித் தலைவர் இந்திராகாந்தி, செயல் அலுவலர் குகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். முருகையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.