நாகப்பட்டினம், பிப்.20 - நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலை யம் அருகில் சிந்தனை சிற்பி சிங்காரவேல ரின் 163 ஆவது பிறந்தநாள் விழா பகுத்தறி வாளர் கழகம் சார்பில் நடைபெற்றது. இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி.நாகைமாலி சிறப்புரையாற்றினார். தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் சிங்காரவேலர் பிறந்த நாள் விழா நாகப்பட்டி னம் ரயில் நிலையம் எதிரில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற விழாவில் மூ.க.ஜீவா தலைமை வகித்தார். உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காகவும், பாட்டாளி மக்களின் துயர்துடைக்க பாடுபட்ட வருமான சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று மக்களால் போற்றப்படுகிறார். பொதுவுடமைவாதி, தொழிற்சங்கவாதி, விடுதலைப் போராட்ட வீரர் என பன்முகம் கொண்டவர் சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர். 1860 பிப்ரவரி 18 ஆம் தேதி சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார். விடுதலைப் போராட்டத்தில் 10 ஆண்டு காலம் சிறைபட்ட வர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரத்து குரல் கொடுத்தவர். சட்டம் படித்து வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு எளிய மக்களுக்காக போராடியவர். சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 163 ஆவது பிறந்த நாள் விழாவில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வீ.பி.நாகைமாலி சிறப்பு ரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ப.சுபாஷ் சந்திரபோஸ், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமணி, சிபிஎம் நகர செய லாளர் க.வெங்கடேஷ் மற்றும் திக, திமுக, காங்கிரஸ், சிபிஐ ஆகிய அரசியல் கட்சி பிர முகர்கள் சிங்காரவேலருக்கு புகழ் வணக்கம் செலுத்தினர்.