நாகப்பட்டினம், ஜன.12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களி லும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் கடை தெரு வில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திகு கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம்.அபூபக்கர் தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கண்டன உரையாற்றினார். கீழ்வேளூர் தெற்கு ஒன்றி யம் சார்பில் சாட்டியக்குடி யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தை யன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப் பினர் வி.சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். வேதாரணியம் தெற்கு ஒன்றியக் குழு சார்பில் தாணிக்கோட்டகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வி. அம்பிகாபதி தலைமை வகித் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு கண் டன உரையாற்றினார். நாகப்பட்டினம் நகரக் குழு மற்றும் தெற்கு ஒன்றிய குழுக்கள் சார்பில் பாப்பா கோவில் ஊராட்சியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் எம்.முருகையன், நாகை தெற்கு ஒன்றியச் செயலா ளர் ஏ.வடிவேலு, நாகை நக ரச் செயலாளர் கே.வெங்க டேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைஞாயிறு ஒன்றி யத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் ஒன்றியச் செய லாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் டி.லதா கண் டன உரையாற்றினார். நாகை வடக்கு ஒன்றிய குழுவின் சார்பில் சிக்கல் கடை தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியச் செயலாளர் வி.வி.ராஜா தலைமை வகித்தார். மாவட் டச் செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ் கண் டன உரையாற்றினார்.