நாகப்பட்டினம், பிப்.22 - நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது. நாகப்பட்டினம் நகராட்சி மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக தலைமை யிலான கூட்டணிக் கட்சிகள் 28 இடங்களையும், அதிமுக 5 இடங்களையும், சுயேட்சை 3 இடங்க ளிலும் வெற்றி பெற்றுள்ளது. நாகை நக ராட்சியை திமுக கைப்பற்றியது. வேளாங்கண்ணி பேரூராட்சியில் மொத்த முள்ள 15 வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 12 இடங்க ளையும், அதிமுக 2 இடங்களையும், சுயேட்சை ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் 13 ஆவது வார்டில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பா ளர் ஜான் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த பேரூராட்சியை திமுக மீண்டும் தக்க வைத்துள்ளது. கீழ்வேளூர் பேரூராட்சி 15 வார்டுகளில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் 10 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், சுயட்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. திட்டச் சேரி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடங்க ளில் சுயட்சை 9 இடங்களிலும், திமுக 5 இடங்க ளில், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள் ளது. தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் அதிமுகவும், 7 இடங்க ளில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. நாகப் பட்டினம் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூ ராட்சிகளில் பெரும்பான்மையாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் வாக்களித் துள்ளனர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டு களில் திமுக 47, சிபிஎம் 1, சிபிஐ 1, காங்கிரஸ் 5, மதிமுக 2, விசிக 1, அதிமுக 3, அமமுக 1, சுயேட்சை 2 இடங்களையும் கைப்பற்றி உள்ளன.
முசிறி
முசிறி நகராட்சி 1 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் த.சுமதி 582 வாக்குகளும், 2 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் சி.மீனா 319 வாக்கு களும், 4ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் து.வசந்தகுமார் 405 வாக்குகளும், 6 ஆவது வார்டில் போட்டியிட்ட வி.சி.க வேட்பாளர் பொ.இளையராஜா 263 வாக்குகளும், 7ஆவது வார்டில் திமுக வேட்பாளர் த.முகேஷ் 456 வாக்குகளும், 8 ஆவது வார்டில் திமுக வேட்பா ளர் சுரேஷ் 331 வாக்குகளும், 10 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் சரண்யா 495 வாக்குகளும், 12 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சரவணன் 287 வாக்குகளும், 13 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சே.இந்திரா 473 வாக்குகளும், 15 ஆவது வார்டு மதிமுக வேட்பாளர் இ.சசிகலா 294 வாக்குகளும், 16 ஆவது வார்டு திமுக வேட்பாளர் ச.சத்தியா 232 வாக்குகளும், 17 ஆவது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ரா.கல்பனா 242 வாக்குகளும், 18 ஆவது வார்டு திமுக வேட்பாளர் பி.நவீன்ராஜ்குமார் 608 வாக்குக ளும், 19 ஆவது வார்டு திமுக வேட்பாளர் சி.கலைச் செல்வி 712 வாக்குகளும், 20ஆவது வார்டு திமுக வேட்பாளர் ரா.தனசேகரன் 543 வாக்குக ளும், 21 ஆவது வார்டு திமுக வேட்பாளர் செ. கவிதா 399 வாக்குகளும், 24 ஆவது வார்டு திமுக வேட்பாளர் மு.புதிமிளா 548 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் வெற்றி பெற்ற கட்சி களின் விவரம்: திமுக - 34, மதிமுக - 1, விடு தலைச் சிறுத்தைகள் - 1, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி -1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி - 1, காங்கிரஸ் - 2. அதிமுக - 7, சுயேச்சை - 2, அமமுக - 1, பாஜக - 1.
பட்டுக்கோட்டை நகராட்சி இழுபறி
பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டு களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 12 இடங்களையும், கூட்டணி கட்சியான மதிமுக ஒரு இடத்தையும் பெற்றது. அதிமுக 12 இடங்களை யும், கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கி ரஸ் 1 இடத்தையும் பெற்றது. சுயேச்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் நகராட்சியை கைப்பற்றுவதில் பலத்த போட்டி நிலவுகிறது. சுயேட்சைகள் ஆதரவு பெறுபவரே நகராட்சியை கைப்பற்ற முடியும் என தெரி கிறது. அதிராம்பட்டினம் நகராட்சியில் 27 வார்டு களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக தனிப்பெரும்பான்மையாக 19 இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. கூட்டணிக் கட்சி யான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்தையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 இடத்தையும் பெற்றுள்ளது. அதிமுக 2 இடங்களையும், சுயேட்சைகள் 2 இடங்களையும், எஸ்டிபிஐ 1 இடத்தையும், பாஜக 1 இடத்தையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது. கும்பகோணம் மாநகராட்சியின் 42 வார்டு களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மாநக ராட்சியை கைப்பற்றியது. கும்பகோணம் அருகே உள்ள பேரூராட்சிகளில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆடுதுறை பேரூராட்சியில், திமுக 4, பாமக 4, அதிமுக 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, மதிமுக 1, சுயேட்சை 2, திருவிடைமருதூர் பேரூராட்சி யில் திமுக 8, மதிமுக 2, காங்கிரஸ் 1, சுயேட்சை 4, திருபுவனம் பேரூராட்சியில் திமுக 6, அதிமுக 5, காங்கிரஸ் 1, சுயேட்சை 3, வேப்பத் தூர் பேரூராட்சியில் திமுக 9, அதிமுக 3, பாஜக 1, விசிக 1, சுயேட்சை 1, சோழபுரம் பேரூராட்சி யில் திமுக 12, பாமக1, சுயேட்சை 2, திருநா கேஸ்வரம் பேரூராட்சி திமுக 9, அதிமுக 3, பாமக 1, சுயேட்சை 2, திருப்பனந்தாள் பேரூராட்சியில் திமுக 7, அதிமுக 2 , பகுஜன்சமாஜ் 1, சுயேட்சை 5, சுவாமிமலை பேரூராட்சியில் திமுக 7, அதிமுக 6, சுயேட்சை 2, பாபநாசம் பேரூராட்சி யில் திமுக 8, அதிமுக 1, அமமுக 1, பாஜக1, காங்கி ரஸ் 1, சுயேட்சை-3.
பேராவூரணி
பேராவூரணி பேரூராட்சி 18 வார்டு களுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 10 இடங் களையும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 1 இடத்தையும் பெற்றது. அதிமுக 4 இடங்களை யும், சுயேட்சைகள் 3 இடங்களையும் பெற்றனர். பெருமகளூர் பேரூராட்சி 12 வார்டுகளுக்கு நடை பெற்ற தேர்தலில் திமுக 6 இடத்தையும், அதிமுக 3 இடத்தையும், சுயேட்சைகள் 3 இடத்தையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
பாபநாசம்
பாபநாசம் பேரூராட்சிக்கான 15 வார்டுகளில் முதல் வார்டில் திமுகவைச் சேர்ந்த தேன்மொழி யும், 3 ஆவது வார்டில் திமுகவைச் சேர்ந்த ஜாபர் அலியும், 4 ஆவது வார்டில் திமுகவைச் சேர்ந்த புஷ்பாவும், 6 ஆவது வார்டில் திமுகவைச் சேர்ந்த பூங்குழலியும், 7 ஈவது வார்டில் திமுகவைச் சேர்ந்த சமீரா பர்வீனும், 10 ஆவது வார்டில் திமுக வைச் சேர்ந்த பிரகாஷும், 12 ஆவது வார்டில் திமுகவைச் சேர்ந்த கஜலெட்சுமியும், 14 ஆவது வார்டில் திமுகவைச் சேர்ந்த துரை முருகனும், 15 ஆவது வார்டில் காங்கிரசை சேர்ந்த பூபதி ராஜா வும் வெற்றி பெற்றனர்.
குடவாசல்
குடவாசல் பேரூராட்சியில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 13 வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெற்ற னர். திமுக -9, சிபிஎம்-2, காங்கிரஸ்-2 என 13 வேட்பாளர்கள் மாபெரும் வெற்றியை பெற்றனர். 1 ஆவது வார்டில் போட்டியிட்ட உ.ஜெயராணி 421 வாக்குகளும், 3 ஆவது வார்டில் போட்டி யிட்ட திமுக வேட்பாளர் பைசல் (எ)ஹா.ஹசன் முகமது 365 வாக்குகளும், 4 ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மகேஸ்வரி ரவி 330 வாக்குகளும், 5 ஆவது வார்டில் போட்டி யிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 395 வாக்குகளும், 7 ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மகாலெட்சுமி முருகேசன் 326 வாக்குகளும், 8 ஆவது வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பா ளர் ம.மணி 311 வாக்குகளும், 9 ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சி.வசந்தி 348 வாக்குகளும், 10 ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கா.குணசேகரன் 241 வாக்கு களும், 11 ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் க.மகேஷ் 343 வாக்குகளும், 13 ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மு.செந்தில் 258 வாக்குகளும், 14 ஆவது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வசந்தி மணி கண்டன் 432 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்ற னர். குடவாசல் பேரூராட்சி கவுன்சிலர் பொறுப்பு க்கு வெற்றி பெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் குடவா சல் வி.பி.சிந்தன் நிலையத்தில் இருந்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பெருவாரியான வாக்களித்து மகத்தான வெற்றியை தேடி தந்த வாக்காளர்களுக்கு கூட்டணியினர் நன்றி தெரிவித்துள்ளனர். இதில் திமுக ஒன்றியச் செயலாளர் பா. பிரபாகரன், பேரூர் கழக செயலாளர் ஆர்.முரு கேசன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன் மற்றும் வட்டார காங்கிரஸ் தலைவர் முனியய்யா, நகர தலைவர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி
பொன்னமராவதி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், திமுக 10 இடங்களிலும், காங்கி ரஸ் ஒரு இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும், அதிமுக 3 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் பொன்னமராவதி பேரூ ராட்சி தலைவர் பதவியை திமுக முதன்முறை யாக கைப்பற்றுகிறது. ஏற்கனவே இப்பேரூ ராட்சியில் அதிமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பாஜக ஒருமுறையும் வெற்றி பெற்றி ருந்தது குறிப்பிடத்தக்கது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி நகராட்சியின் 24 வார்டுகளில் போட்டியிட்ட மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி வேட்பாளர்கள் 20 வார்டு களை கைப்பற்றியுள்ளனர். சிபிஐ(எம்) வேட்பா ளர்கள் : வார்டு 11 - ராமலோக ஈஸ்வரி, வார்டு 24 - ஜெயபிரகாஷ், காங்கிரஸ் வேட்பாளர்கள்: வார்டு 7 - ராஜேந்திரன், வார்டு 9 -எழிலரசன், வார்டு 18 - சுசீலா, திமுக வேட்பாளர்கள்: வார்டு 1 - விஜயபாஸ்கர், வார்டு 2 - முருகவேல், வார்டு 3 - கவிதா, வார்டு 4 - ரெஜினா, வார்டு 5 - பாண்டி யன், வார்டு 6 - கோமதி, வார்டு 8 - எமல்டாமேரி, வார்டு 10 - உமா, வார்டு 12 -ராஜேஸ்வரி, வார்டு 13 - தேம்பாவணி, வார்டு 14 (சுயேட்சை வேட்பா ளர்) - தாஜூதீன், வார்டு 15 - மின்னல்கொடி, வார்டு 16 - ரவி, வார்டு 17 - ரமேஷ்குமார், வார்டு 19 - கார்த்திகேயன், வார்டு 20 - தேவி, சிபிஐ வேட்பாளர் - வார்டு 21-இல் லட்சுமி, வார்டு 22 - உஷா, வார்டு 23 (சுயேட்சை வேட்பாளர்) - சர வணன் வெற்றி பெற்றுள்ளனர். இதில் திமுக 14, காங்கிரஸ் 3, சிபிஎம் 2, அதிமுக 2, சிபிஐ 1, சுயேட்சை 2 என வார்டு களை கைப்பற்றியுள்ளனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் நகராட்சி மற்றும் குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லப்பைக்குடிக்காடு ஆகிய 4 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றி யது. பெரம்பலூர் நகராட்சி 21 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்: 1 ஆவது வார்டு (திமுக) ஷகர்பானு அப்துல்பாருக், 2 ஆவது வார்டு (திமுக) சுசிலா, 3 ஆவது வார்டு (திமுக) ராகவிசந்திரலேகா, 4 ஆவது வார்டு (சுயேச்சை) சௌமியா, 5 ஆவது வார்டு (திமுக) சேகர், 6 ஆவது வார்டு (திமுக) சித்தார்த் தன், 7 ஆவது வார்டு (திமுக) ஷாலினி, 8 ஆவது வார்டு (விசிக) சண்முகசுந்தரம், 9 ஆவது வார்டு (திமுக) ஜெயப்பிரியா, 10 ஆவது வார்டு மணி வேல் (சுயேட்சை), 11 ஆவது வார்டு (திமுக) அம்பிகா, 12 ஆவது வார்டு சசிஇன்பென்டா (திமுக), 13 ஆவது வார்டு நல்லூசாமி (திமுக), 14 ஆவது வார்டு ரஹமத்துல்லா (திமுக), 15 ஆவது வார்டு சிவக்குமார் (திமுக), 16 ஆவது வார்டு தன மணி (அதிமுக), 17 ஆவது வார்டு துரை.காம ராஜ் (திமுக), 18 ஆவது வார்டு லட்சுமி சரவணன் (அதிமுக), 19 ஆவது வார்டு சித்ரா (திமுக), 20 ஆவது வார்டு அரிபாஸ்கர், 21 ஆவது வார்டு பழனி சாமி (அதிமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
குரும்பலூர் பேரூராட்சி: 15 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள்
1 ஆவது வார்டு செல்வராஜ் (திமுக), 2 ஆவது வார்டு ஆனந்தன் (திமுக), 3 ஆவது வார்டு கவிதா (சுயேட்சை), 4 ஆவது வார்டு பானுமதி (திமுக), 3 ஆவது வார்டு கவிதா (சுயேட்சை), 4 ஆவது வார்டு பானுமதி (திமுக), 5 ஆவது வார்டு சுமதி (திமுக), 6 ஆவது வார்டு செல்வராணி (திமுக), 7 ஆவது வார்டு செல்வராஜ் (திமுக), 8 ஆவது வார்டு வேல்முருகன் (திமுக), 9 ஆவது வார்டு கீதா (திமுக), 10 ஆவது வார்டு பிரபு (திமுக), 13 ஆவது வார்டு வளர்மதி (திமுக), 14 ஆவது வார்டு ரம்யா (சுயேட்சை) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
அரும்பாவூர் பேரூராட்சி: 15 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள்
1 ஆவது வார்டு (திமுக) கு.சரண்யா, 2 ஆவது வார்டு (சுயேட்சை) ரெ.தங்கராஜன், 3 ஆவது வார்டு (அதிமுக) செல்லம், 4 ஆவது வார்டு (திமுக) பா.செல்வி, 5 ஆவது வார்டு மருதாம்பாள் (அதிமுக), 6 ஆவது வார்டு (திமுக) அப்துல் காதர், 7 ஆவது வார்டு (திமுக) வள்ளியம்மை, 8 ஆவது வார்டு (திமுக) மோகன், 9 ஆவது வார்டு (திமுக) புஷ்பலதா, 10 ஆவது வார்டு, (திமுக) ராமகிருஷ்ணன், 11 ஆவது வார்டு (திமுக) வித்யா, 12 ஆவது வார்டு (அதிமுக) கீதா, 13 ஆவது வார்டு (அதிமுக) பொ.சிக்கன், 14 ஆவது வார்டு (அதிமுக) பார்த்திபன், 15 ஆவது வார்டு (அதிமுக) ஜெய்கணேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பூலாம்பாடி பேரூராட்சி: 15 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள்
1 ஆவது வார்டு கலைச்செல்வி (திமுக), 2 ஆவது வார்டு கண்ணகி (திமுக), 3 ஆவது வார்டு ராஜலெட்சுமி (திமுக), 4 ஆவது வார்டு கஸ்தூரி (அதிமுக), 5 ஆவது வார்டு பரக்கத்துன்னிஷா (திமுக), 6 ஆவது வார்டு அன்னபோஸ்ட் மாணிக் கம் (திமுக), 7 ஆவது வார்டு செல்வலெட்சுமி (திமுக), 8 ஆவது வார்டு (திமுக) க.ராமதாஸ், 9 ஆவது வார்டு (அதிமுக) சுதாகர், 10 ஆவது வார்டு (சுயேட்சை) க.ராமதாஸ், 11 ஆவது வார்டு அன்னபோஸட் பூங்கொடி (திமுக), 12 ஆவது வார்டு (திமுக) தேவிகா, 13 ஆவது வார்டு (திமுக) மஞ்சுளா, 14 ஆவது வார்டு (திமுக) செல்வ ராணி, 15 ஆவது வார்டு பாக்யலட்சுமி (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.
லப்பைக்குடிகாடு பேரூராட்சி: 15 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள்
1 ஆவது வார்டு ரபியுதீன் (மதிமுக), 2 ஆவது வார்டு எகசான்தாஜ் (திமுக), 3 ஆவது வார்டு நூர்நிசா (திமுக), 4 ஆவது வார்டு ஜாகிர் உசேன் (திமுக), 5 ஆவது வார்டு ஜாபர் உசேன் (சுயேட்சை), 6 ஆவது வார்டு சபீதா பானு (திமுக), லெப்பைக் குடிகாடு 7 ஆவது வார்டு தன லெட்சுமி (திமுக), 8 ஆவது வார்டு ரசூல் அகமது (திமுக), 9 ஆவது வார்டு மீரா மொய்தீன் (திமுக), 10 ஆவது வார்டு ரசிதா பேகம் (திமுக), 11 ஆவது வார்டு மசூதாபேகம் (திமுக), 12 ஆவது வார்டு மாலிக் பாஷா (சுயேட்சை), 13 ஆவது வார்டு சேக் தாவூத் (திமுக), 14 ஆவது வார்டு நஜ்முன் னிசா (திமுக), 15 ஆவது வார்டு ஷமீம்பானு (திமுக கூட்டணி) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தத்தில் பெரம்பலூர் நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
புதுக்கோட்டை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் புதுக் கோட்டை மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 7 பேரூ ராட்சிகளில் திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஒரு பேரூராட்சியை அதிமுக கைப்பற்றி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நக ராட்சிகள், 8 பேரூராட்சிகளுக்கான தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிபிஎம், காங்கிரஸ், சிபிஐ, விசிக, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதே நேரத்தில் அதிமுக தனித்துப் போட்டியி டுவதாக தலைமை அறிவித்தாலும் உள்ளூர் மட்டத்தில் பாஜக, அமமுக, தேமுதிக மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்டவைளுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 42 வார்டுகளில் திமுக 24, அதிமுக 8, காங்கிரஸ் 3, அமமுக 1, சுயேட்சைகள் 6 என வெற்றி பெற்றுள்ளது. தனிப் பெரும்பான்மை பலத்துடன் திமுக நகர்மன்றத்தை கைப்பற்று கிறது. அறந்தாங்கி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் திமுக 17, காங்கிரஸ் 3, அதிமுக 3, தேமுதிக 1, சுயேட்சை 3 என வெற்றி பெற்றுள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் திமுக நகர்மன்ற த்தை கைப்பற்றியது. கீரனூரில் திமுக 13, சிபிஎம் 1, காங்கிரஸ் 1 என முழுமையாக திமுக கூட்டணி வெற்றி பெற்று பேரூராட்சியை கைப்பற்றியது. ஆலங்குடி பேரூராட்சியில் உள்ள 15 வார்டு களில் திமுக 9, அதிமுக 2, சுயேட்சைகள் 4 என வெற்றி பெற்று திமுக பேரூராட்சியை கைப்பற்றி யது. அரிமளத்தில் திமுக 8, காங்கிரஸ் 2, தேமுதிக 2, அதிமுக 1, சுயேச்சை 2 என வெற்றி பெற்று திமுக பேரூராட்சியை கைப்பற்றுகிறது. பொன்னமராவதியில் திமுக 10, அதிமுக 3, காங்கிரஸ் 1, சுயேட்சை 1 என வெற்றி பெற்று திமுக பேரூராட்சியை கைப்பற்றுகிறது. கீரமங்கலத்தில் திமுக 10, சிபிஎம் 1, சிபிஐ 1, காங்கிரஸ் 1, சுயேட்சை 2 என வெற்றி பெற்று திமுக கூட்டணி பேரூராட்சியை கைப்பற்று கிறது. ஆலங்குடியில் திமுக 9, அதிமுக 2, சுயேட்சைகள் 4 என வெற்றி பெற்று திமுக கைப்பற்றியது. இலுப்பூரில் திமுக 8, அதிமுக 5, சுயேச்சை 2 என வெற்றி பெற்று பேரூ ராட்சியை திமுக கைப்பற்றியது. அன்னவாச லில் அதிமுக 8, திமுக 5, காங்கிரஸ் 1 சுயேட்சை 1 என வெற்றி பெற்று பேரூராட்சியை அதிமுக கைப்பற்றும் நிலையில் உள்ளது.
ஒரு ஓட்டுகூட வாங்காத அதிமுக வேட்பாளர்
புதுக்கோட்டை கறம்பக்குடி பேரூராட்சி 7 ஆவது வார்டில் 528 வாக்குகள் உள்ளன. இங்கு இஸ்லாமியர்களும் அதிகமாக உள்ளனர். இந்த வார்டில் திமுக இளைஞரணி பரூக், திமுக -வில் வாய்ப்புக் கிடைக்காமல் அப்துல் கரீம், அம முகவை சேர்ந்த சுயேட்சை பிருத்விராஜ், அதிமுக வேட்பாளர் இப்ராம்ஷா, நாம்தமிழர், லெனினிஸ்ட் மார்க்சிஸ்ட் உள்பட 6 பேரும் போட்டியிட்டனர். இதில் சுயேட்சை வேட்பாளர் பிருத்விராஜ் 175 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பரூர் 149 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் அப்துல் கரீம் 135 வாக்குகளும் பெற்ற னர். இதே வார்டில் போட்டியிட்ட அதிமுக ந.செ. அப்துல்லாவின் தம்பியான இப்ராம்ஷா ஒரு ஓட்டுகள்கூட வாங்கவில்லை. இவரது குடும்ப ஓட்டுகளும் இதே வார்டில் இருந்தும்கூட யாரும் ஓட்டுப் போடவில்லை. வேட்பாளரும்கூட அவரது ஓட்டை மற்ற வேட்பாளருக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ ஒரு இடத்தில் வெற்றி
கீரமங்கலம் பேரூராட்சியில் 11 ஆவது வார்டில் போட்டியிட்ட சிபிஐ வேட்பளர் த.முத்த மிழ்ச்செல்வி 243 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ம.ராஜாமணி 180 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் 122 இடங்க ளில் 84 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றி யுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியுள்ளன. தமிழ்நாட்டில் 38 ஆவது மாவட்டமாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் சந்தித்த முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இதுவாகும். மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய 2 நகராட்சிகள் மற்றும் குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய 4 பேரூராட்சிகள் உள்ளன. இதில் நகராட்சிகளில் 60 வார்டுகளும், பேரூராட்சிகளில் 63 வார்டுகள் என மொத்தம் 123 வார்டுகள் உள்ளன. இதில், மயிலாடுதுறை நக ராட்சி 19 ஆவது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அன்னதாச்சி இறந்ததால், அந்த வார்டில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், தரங்கம்பாடி பேரூராட்சியில் இரண்டு அதிமுக வேட்பாளரும், 1 திமுக வேட்பாளர் என 3 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இதனால், நகராட்சியில் 59 வார்டு உறுப்பி னர்களும், பேரூராட்சியில் 60 உறுப்பினர்கள் என மொத்தம் 122 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர். இதில் திமுக 77, அதிமுக 23, பாமக 06, தேமுதிக 01, சுயேச்சை 07, விசிக 01, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 01, சிபிஐ 01, காங்கிரஸ் 03, மதிமுக 02 என வெற்றி பெற்றுள் ளன. மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 24 வார்டுகளை திமுக கைப்பற்றி நகராட்சியை தன்வசப்படுத்தியுள்ளது. அதே போன்று சீர்காழி நகராட்சியிலும் திமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. மேலும் 4 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. தரங்கம்பாடி பேரூராட்சியில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி தரங் கம்பாடி பேரூராட்சியில் 2 வார்டுகளில் அதிமுக வும், 1 வார்டில் திமுகவும் போட்டியின்றி தேர்வான நிலையில், தேர்தல் நடந்த 15 வார்டுகளையும் திமுக கைப்பற்றியது. வெற்றி பெற்ற திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் செம்பனார்கோ விலில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செய்தனர். மயிலாடுதுறை, செம்பனார்கோவில், திருக் கடையூர், பொறையார் பகுதிகள் முழுவதும் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை வழங்கி மேளதாளங்களை இசைத்து கொண்டாட்டங்க ளில் ஈடுபட்டனர். பின்னர் திமுக மாவட்ட பொறுப் பாளரும், பூம்புகார் எம் எல்.ஏவுமான நிவேதா எம்.முருகனிடம் வெற்றிப் பெற்றவர்கள் வாழ்த்து பெற்றனர். மாவட்ட துணைசெயலாளர் மு.ஞானவேலன், ஒன்றியச் செயலாளர்கள் அப்துல்மாலிக், பி.எம்.அன்பு, திமுக தகவல் தொடர்பு அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் மற்றும் திமுக நிர்வாகிகள், ஊராட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.